வாய்மொழித் தேர்விற்க்கான மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை!

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே,

 வணக்கம்! காலாண்டுத் தேர்வில் கொடுக்கப்படும் 100 மதிப்பெண்களில் 50 மதிப்பெண்கள் எழுத்து தேர்விற்கும் 50 மதிப்பெண்கள் வாய்மொழித் தேர்விற்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

வாய்மொழித் தேர்விற்க்கான மதிப்பெண்கள் பகிர்ந்தளிக்கப்படும் முறை:  

நாளை(06-10-2020) முதல் தினமும் GOOGLE MEET மூலம் 5 மதிப்பெண்களுக்கான வினாக்கள் மாணவர்களிடம் கேட்கப்படும். ஒவ்வொரு பாடத்திற்கும் இந்த முறையில் 30 மதிப்பெண்கள் கணக்கிடப்படும். மீதமுள்ள 20 மதிப்பெண்களுக்கு இன்று(05-10-2020) முதல் பாட ஆசிரியர்களுக்கு TELEGRAM குரூப் மூலம் தினமும் கொடுக்கப்படும் வீட்டுப்படங்களை அனுப்புவதன் மூலம் கணக்கிடப்படும். ஒரு பாடத்திற்க்கு ஒவ்வொரு முறையும் விடைகளை அனுப்புவதற்கு 5 மதிப்பெண்கள் கொடுக்கப்படும். வீட்டுப்பாடங்களை அனுப்புவதற்கான நேரம் இரவு 08 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.GOOGLE MEET மூலம் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் வகுப்பு ஆசிரியர்களிடம் தெரிவிக்கவும்.

பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்:

5ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் 12-10-2020 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

UKG முதல் 4ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் 13-10-2020 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.

கலந்தாய்வு கூட்டத்திற்கு வருகை புரிவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியுடன் ஆசிரியர்களிடம் மாணவர்களின் கல்வி சம்பந்தமான விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பொங்கல் விடுமுறை...

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

73-வது குடியரசு தின விழா...