1 முதல் 4 ஆம் வகுப்பு மாணவர்கள் முதல் இடைப் பருவ தேர்வு எழுதும் முறை...
அன்பார்ந்த மாணவ,மாணவிகளே,
23-08-2021 (திங்கட்கிழமை) முதல் முதலாம் இடைப் பருவ தேர்வுகள் நடைபெற உள்ளது.
அதுசமயம் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு காலை 11 மணி முதல் தேர்வுகள் நடைபெறும்.
காலை 10.00 மணிக்கு GOOGLE MEET LINK மூலம் தேர்வுக்கான ஆயத்தப்பணிகள் ஆசிரியர்கள் மூலம் நடைபெறும்.
வினாத்தாட்கள் அனைத்தும் TELEGRAM குரூப்புக்கு காலை 11 மணிக்கு அனுப்பப்படும். காலை 11 மணிக்கு வினாத்தாள் சம்பந்தமான சந்தேகங்கள் Google Meet மூலம் பாட ஆசிரியர்களிடம் கேட்கலாம்.
தேர்வுகள் 50 மதிப்பெண்களுக்கு காலை 11.00 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
தேர்வு எழுதிய விடைத்தாட்களை மதியம் 1.00 மணிக்குள் போட்டோ எடுத்து PDF வடிவில் GOOGLE CLASSROOM க்கு அனுப்பவும்.
மேலும் தினமும் காலை தேர்வுக்கான திருப்புதல் வீடியோ அனுப்பப்படும்.
அனைத்து விடைத்தாட்களையும் 31-08-2021(செவ்வாய்க்கிழமை) அன்று பள்ளியில் பெற்றோர்கள் மூலம் நேரடியாக சமர்ப்பிக்கவும்.
1 முதல் 4 ஆம் வகுப்பு வரை உள்ள அனைத்து தேர்வுக்கான வினாத்தாட்களையும் பெற்றோர்கள் 23-08-2021 (திங்கட்கிழமை) அன்று பள்ளியில் பெற்று கொள்ளவும்.
Comments
Post a Comment