Posts

'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?

 'எனக்கு படிப்பு வராது’ என நினைக்கும் குழந்தைகளுக்கு பாடங்களை எப்படி கற்றுத் தருவது?  குழந்தைகளுக்கு பாடங்களைப் பல விதங்களில் சொல்லித் தர முடியும். அதைச் சுவாரஸ்யமாக்கினால் புரிந்து கொள்வது எளிதாகும். இப்படிச் செய்ய ஒரு விதம், 'ரெஸிப்ரோகல் லர்னிங்’ (Reciprocal Learning) என்ற முறையாகும். இந்த முறையை உபயோகிப்படுத்துகையில் பாடத்தைப் புரிந்து கொண்டு அவர்கள் படிக்கும் திறன் மேம்படும். இதைப் பல ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன.  படிக்கத் திணறும் மாணவர்களுக்கும், பாடத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட, பாடத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள உதவிய முறைகளைப் பற்றி பல தகவல்கள் உள்ளன. குறிப்பாக, வகுப்பில் ஒரு இடத்தில் உட்கார முடியாமல் கவனம் இங்கும் அங்கும் சிதறி அலைந்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு, வகுப்புகளில் அவர்களின் முழுக் கவனம் கூடிய பங்கேற்பும், பாடத்தைப் புரிந்து கொள்ள மேம்படுத்துவதிலும் அத்தகைய முறைகள் உதவும். ‘ரெஸிப்ரோகல் லர்னிங்’ என்ற இந்த முறையை ஆசிரியர் ஒருவர் கற்றுத் தர, மாணவர்கள் தானாகவே கற்றுக் கொள்ளுவதற்கு உதவும் ஒரு முறையாகும். இது எப்படி சாத்தியம் என்பதைப் பார்ப்போம். ரெஸிப்ரோகல...

73-வது குடியரசு தின விழா...

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே, வணக்கம்! 27-01-2022(வியாழக்கிழமை) அன்று குடியரசு  தின விழா நிகழ்ச்சிகள் ஆன்லைன் வகுப்பில் கொண்டாடப்பட உள்ளது. LKG முதல் 4ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி ஆன்லைன் மூலம் 27-01-2022(வியாழக்கிழமை) அன்று காலை 10 மணி அளவிலும் 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 11.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது. பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் 24-01-2022(திங்கட்கிழமை) அன்றுக்குள் வகுப்பு ஆசிரியரிடம் ஆன்லைன் வகுப்பில் தெரிவிக்கவும். கட்டுரை போட்டி: 5 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் "இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு(Role of Tamil Nadu in Freedom Struggle)" என்ற தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 3 பக்கத்திற்கு மிகாமல் கட்டுரையாக A4 தாளில் 26-01-2022(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கழக சந்திப்பின் போது பள்ளியில் சமர்ப்பிக்கவும். ஓவிய போட்டி: LKG  முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் இயற்கை சம்பந்தமான மாணவர்களின் சொந்த படைப்பை A4 தாளில் 26-01-2022(புதன்க...

26-01-2022(புதன்கிழமை) அன்று பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம்...

அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,       வணக்கம்! வருகின்ற 26-01-2022(புதன்கிழமை) அன்று காலை 10.30 மணி அளவில் LKG முதல் 8ம் வகுப்பு வரை பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் பெற்றோர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பள்ளியின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். குறிப்பு:  ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மற்றும் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ளாத மாணவர்களின்  பெற்றோர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவும்.

பொங்கல் விடுமுறை...

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே , வணக்கம் ! நாளை (14-01-2022 வெள்ளிக்கிழமை ) முதல் பொங்கல்   பண்டிகையை முன்னிட்டு   விடுமுறை அளிக்கப்படுகிறது . மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் 19-01-2022 (புதன்கிழமை ) முதல் நடைபெறும் . இரண்டாம் பருவ கல்வி கட்டண பாக்கி தொகை வைத்துள்ளவர்கள் 19-01-2022 புதன்கிழமை க்குள் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம் .   அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம் .

8ஆம் வகுப்பு மாணவன் A.முகமது சேக் பரீத் INSPIRE AWARD என்ற அறிவியல் படைப்புக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10000 பரிசு தொகை பெற்றுள்ளார்.

 அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே.   நமது பள்ளியை சேர்ந்த 8ஆம் வகுப்பு படிக்கும் A.முகமது சேக் பரீத் மாணவன் ஒன்றிய அரசின் INSPIRE AWARD என்ற அறிவியல் படைப்புக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10000 பரிசு தொகை பெற்றுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

பள்ளி திறப்பு(01-02-2022)...

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே,      வணக்கம் !       1 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மீண்டும் 01-02-2022(செவ்வாய் கிழமை) முதல் பள்ளி செயல்படும். 1 முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு  சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். B பிரிவு மாணவர்கள்  மட்டும் 01-02-2022(செவ்வாய்க்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். A பிரிவு மாணவர்கள் 02-02-2022(புதன்கிழமை) அன்று பள்ளிக்கு வரவும். கல்வி கட்டண பாக்கி தொகையை வரும் 04-02-2022( வெள்ளிக்கிழமை) தேதிக்குள் செலுத்தி தங்களது மேலான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என பள்ளியின் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் A பிரிவு மாணவர்களுக்கு திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும்.   B பிரிவு மாணவர்களுக்கு செவ்வாய்கிழமை, வியாழக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் பள்ளி செயல்படும். பள்ளி  வாகனம் வழக்கம்போல் செயல்படும். மாணவர்கள்   கீழ்கண்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ·    காலை, மாலை ...

பள்ளி திறப்பு!!!

  அன்பார்ந்த மாணவ மாணவிகளே மற்றும் பெற்றோர்களே ,      வணக்கம் ! 01-11-2021( திங்கட்கிழமை ) முதல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளியில் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . நமது பள்ளியில் உள்ளூர் மாணவர்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வருபவர்கள் ஆகிய மாணவர்களுக்கு 01-11-2021( திங்கட்கிழமை ) முதல் பள்ளி திறக்கப்படும் . பள்ளி வாகனம் மூலம் வரும் மாணவர்களுக்கு 10-11-2021( புதன்கிழமை ) அன்று பள்ளி திறக்கப்படும் . பள்ளி வாகனத்தில் குழந்தைகளை அனுப்ப விருப்பம் உள்ள பெற்றோர்கள் முன்பணமாக வாகன கட்டணம்   ரூபாய் 2000 பள்ளியில் செலுத்தி 08-11-2021 திங்கட்கிழமைக்குள் பதிவு செய்து கொள்ளவும் . வாகன கட்டணம் செலுத்தி பதிவு செய்தவர்கள் அடிப்படையில் 10-11-2021 அன்று மாலை முதல் பள்ளி வாகனம் அனுப்பப்படும் . பெற்றோர்கள் இரண்டாம் பருவ கல்வி கட்டணத்தை 25-10-2021( திங்கட்கிழமை ) முதல் செலுத்தி ...